1 |
நிச்சயமானது. |
/content/ayah/audio/hudhaify/069001.mp3
|
الْحَاقَّةُ |
2 |
நிச்சயமானது எது? |
/content/ayah/audio/hudhaify/069002.mp3
|
مَا الْحَاقَّةُ |
3 |
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? |
/content/ayah/audio/hudhaify/069003.mp3
|
وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ |
4 |
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர். |
/content/ayah/audio/hudhaify/069004.mp3
|
كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ |
5 |
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர். |
/content/ayah/audio/hudhaify/069005.mp3
|
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ |
6 |
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். |
/content/ayah/audio/hudhaify/069006.mp3
|
وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ |
7 |
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். |
/content/ayah/audio/hudhaify/069007.mp3
|
سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ |
8 |
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா? |
/content/ayah/audio/hudhaify/069008.mp3
|
فَهَلْ تَرَى لَهُم مِّن بَاقِيَةٍ |
9 |
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர். |
/content/ayah/audio/hudhaify/069009.mp3
|
وَجَاء فِرْعَوْنُ وَمَن قَبْلَهُ وَالْمُؤْتَفِكَاتُ بِالْخَاطِئَةِ |
10 |
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான். |
/content/ayah/audio/hudhaify/069010.mp3
|
فَعَصَوْا رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً |
11 |
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம். |
/content/ayah/audio/hudhaify/069011.mp3
|
إِنَّا لَمَّا طَغَى الْمَاء حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَةِ |
12 |
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்). |
/content/ayah/audio/hudhaify/069012.mp3
|
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَا أُذُنٌ وَاعِيَةٌ |
13 |
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது: |
/content/ayah/audio/hudhaify/069013.mp3
|
فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ |
14 |
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் - |
/content/ayah/audio/hudhaify/069014.mp3
|
وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً |
15 |
அந்த நாளில் தாம் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். |
/content/ayah/audio/hudhaify/069015.mp3
|
فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ |
16 |
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும். |
/content/ayah/audio/hudhaify/069016.mp3
|
وَانشَقَّتِ السَّمَاء فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ |
17 |
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/069017.mp3
|
وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ |
18 |
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. |
/content/ayah/audio/hudhaify/069018.mp3
|
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنكُمْ خَافِيَةٌ |
19 |
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), "இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்" எனக் கூறுவார். |
/content/ayah/audio/hudhaify/069019.mp3
|
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَؤُوا كِتَابِيهْ |
20 |
"நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்." |
/content/ayah/audio/hudhaify/069020.mp3
|
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيهْ |
21 |
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் - |
/content/ayah/audio/hudhaify/069021.mp3
|
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ |
22 |
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். |
/content/ayah/audio/hudhaify/069022.mp3
|
فِي جَنَّةٍ عَالِيَةٍ |
23 |
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும். |
/content/ayah/audio/hudhaify/069023.mp3
|
قُطُوفُهَا دَانِيَةٌ |
24 |
"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்" (என அவர்களுக்குக் கூறப்படும்). |
/content/ayah/audio/hudhaify/069024.mp3
|
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ |
25 |
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; "என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! |
/content/ayah/audio/hudhaify/069025.mp3
|
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيهْ |
26 |
"அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- |
/content/ayah/audio/hudhaify/069026.mp3
|
وَلَمْ أَدْرِ مَا حِسَابِيهْ |
27 |
"(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? |
/content/ayah/audio/hudhaify/069027.mp3
|
يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ |
28 |
"என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! |
/content/ayah/audio/hudhaify/069028.mp3
|
مَا أَغْنَى عَنِّي مَالِيهْ |
29 |
"என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!" (என்று அரற்றுவான்). |
/content/ayah/audio/hudhaify/069029.mp3
|
هَلَكَ عَنِّي سُلْطَانِيهْ |
30 |
"(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்." |
/content/ayah/audio/hudhaify/069030.mp3
|
خُذُوهُ فَغُلُّوهُ |
31 |
"பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். |
/content/ayah/audio/hudhaify/069031.mp3
|
ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ |
32 |
"பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்" (என்று உத்தரவிடப்படும்). |
/content/ayah/audio/hudhaify/069032.mp3
|
ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ |
33 |
"நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்." |
/content/ayah/audio/hudhaify/069033.mp3
|
إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ |
34 |
"அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை." |
/content/ayah/audio/hudhaify/069034.mp3
|
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ |
35 |
"எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை." |
/content/ayah/audio/hudhaify/069035.mp3
|
فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ |
36 |
"சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை." |
/content/ayah/audio/hudhaify/069036.mp3
|
وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ |
37 |
"குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்." |
/content/ayah/audio/hudhaify/069037.mp3
|
لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِؤُونَ |
38 |
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன். |
/content/ayah/audio/hudhaify/069038.mp3
|
فَلَا أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ |
39 |
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.) |
/content/ayah/audio/hudhaify/069039.mp3
|
وَمَا لَا تُبْصِرُونَ |
40 |
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும். |
/content/ayah/audio/hudhaify/069040.mp3
|
إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ |
41 |
இது ஒரு கவிஞனின் சொல்லன்று (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள். |
/content/ayah/audio/hudhaify/069041.mp3
|
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ |
42 |
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள். |
/content/ayah/audio/hudhaify/069042.mp3
|
وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَا تَذَكَّرُونَ |
43 |
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். |
/content/ayah/audio/hudhaify/069043.mp3
|
تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ |
44 |
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் - |
/content/ayah/audio/hudhaify/069044.mp3
|
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ |
45 |
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- |
/content/ayah/audio/hudhaify/069045.mp3
|
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ |
46 |
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். |
/content/ayah/audio/hudhaify/069046.mp3
|
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ |
47 |
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. |
/content/ayah/audio/hudhaify/069047.mp3
|
فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ |
48 |
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். |
/content/ayah/audio/hudhaify/069048.mp3
|
وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ |
49 |
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். |
/content/ayah/audio/hudhaify/069049.mp3
|
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ |
50 |
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/069050.mp3
|
وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ |
51 |
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும். |
/content/ayah/audio/hudhaify/069051.mp3
|
وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ |
52 |
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக. |
/content/ayah/audio/hudhaify/069052.mp3
|
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ |