1 |
(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான். |
/content/ayah/audio/hudhaify/070001.mp3
|
سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ |
2 |
காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை. |
/content/ayah/audio/hudhaify/070002.mp3
|
لِّلْكَافِرينَ لَيْسَ لَهُ دَافِعٌ |
3 |
(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்). |
/content/ayah/audio/hudhaify/070003.mp3
|
مِّنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ |
4 |
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/070004.mp3
|
تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ |
5 |
எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. |
/content/ayah/audio/hudhaify/070005.mp3
|
فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا |
6 |
நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர். |
/content/ayah/audio/hudhaify/070006.mp3
|
إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا |
7 |
ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம். |
/content/ayah/audio/hudhaify/070007.mp3
|
وَنَرَاهُ قَرِيبًا |
8 |
வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்- |
/content/ayah/audio/hudhaify/070008.mp3
|
يَوْمَ تَكُونُ السَّمَاء كَالْمُهْلِ |
9 |
இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)- |
/content/ayah/audio/hudhaify/070009.mp3
|
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ |
10 |
(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான். |
/content/ayah/audio/hudhaify/070010.mp3
|
وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا |
11 |
அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்- |
/content/ayah/audio/hudhaify/070011.mp3
|
يُبَصَّرُونَهُمْ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ |
12 |
தன் மனைவியையும், தன் சகோதரனையும்- |
/content/ayah/audio/hudhaify/070012.mp3
|
وَصَاحِبَتِهِ وَأَخِيهِ |
13 |
அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்- |
/content/ayah/audio/hudhaify/070013.mp3
|
وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْويهِ |
14 |
இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்). |
/content/ayah/audio/hudhaify/070014.mp3
|
وَمَن فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ |
15 |
அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும். |
/content/ayah/audio/hudhaify/070015.mp3
|
كَلَّا إِنَّهَا لَظَى |
16 |
அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும். |
/content/ayah/audio/hudhaify/070016.mp3
|
نَزَّاعَةً لِّلشَّوَى |
17 |
(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும். |
/content/ayah/audio/hudhaify/070017.mp3
|
تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى |
18 |
அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்) |
/content/ayah/audio/hudhaify/070018.mp3
|
وَجَمَعَ فَأَوْعَى |
19 |
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். |
/content/ayah/audio/hudhaify/070019.mp3
|
إِنَّ الْإِنسَانَ خُلِقَ هَلُوعًا |
20 |
அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான், |
/content/ayah/audio/hudhaify/070020.mp3
|
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا |
21 |
ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான். |
/content/ayah/audio/hudhaify/070021.mp3
|
وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا |
22 |
தொழுகையாளிகளைத் தவிர- |
/content/ayah/audio/hudhaify/070022.mp3
|
إِلَّا الْمُصَلِّينَ |
23 |
(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070023.mp3
|
الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ |
24 |
அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. |
/content/ayah/audio/hudhaify/070024.mp3
|
وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَّعْلُومٌ |
25 |
யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு). |
/content/ayah/audio/hudhaify/070025.mp3
|
لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ |
26 |
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070026.mp3
|
وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ |
27 |
இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070027.mp3
|
وَالَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ |
28 |
நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல. |
/content/ayah/audio/hudhaify/070028.mp3
|
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ |
29 |
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்- |
/content/ayah/audio/hudhaify/070029.mp3
|
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ |
30 |
தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள். |
/content/ayah/audio/hudhaify/070030.mp3
|
إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ |
31 |
எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070031.mp3
|
فَمَنِ ابْتَغَى وَرَاء ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْعَادُونَ |
32 |
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070032.mp3
|
وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ |
33 |
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070033.mp3
|
وَالَّذِينَ هُم بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ |
34 |
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். |
/content/ayah/audio/hudhaify/070034.mp3
|
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ |
35 |
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/070035.mp3
|
أُوْلَئِكَ فِي جَنَّاتٍ مُّكْرَمُونَ |
36 |
நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர். |
/content/ayah/audio/hudhaify/070036.mp3
|
فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ |
37 |
வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக. |
/content/ayah/audio/hudhaify/070037.mp3
|
عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ |
38 |
அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா? |
/content/ayah/audio/hudhaify/070038.mp3
|
أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ |
39 |
அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம். |
/content/ayah/audio/hudhaify/070039.mp3
|
كَلَّا إِنَّا خَلَقْنَاهُم مِّمَّا يَعْلَمُونَ |
40 |
எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம். |
/content/ayah/audio/hudhaify/070040.mp3
|
فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ |
41 |
(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது. |
/content/ayah/audio/hudhaify/070041.mp3
|
عَلَى أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ |
42 |
ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக. |
/content/ayah/audio/hudhaify/070042.mp3
|
فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ |
43 |
நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள். |
/content/ayah/audio/hudhaify/070043.mp3
|
يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ |
44 |
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான். |
/content/ayah/audio/hudhaify/070044.mp3
|
خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ |