1 |
கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். |
/content/ayah/audio/hudhaify/075001.mp3
|
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ |
2 |
நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். |
/content/ayah/audio/hudhaify/075002.mp3
|
وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ |
3 |
(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? |
/content/ayah/audio/hudhaify/075003.mp3
|
أَيَحْسَبُ الْإِنسَانُ أَلَّن نَجْمَعَ عِظَامَهُ |
4 |
அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். |
/content/ayah/audio/hudhaify/075004.mp3
|
بَلَى قَادِرِينَ عَلَى أَن نُّسَوِّيَ بَنَانَهُ |
5 |
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். |
/content/ayah/audio/hudhaify/075005.mp3
|
بَلْ يُرِيدُ الْإِنسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ |
6 |
"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான். |
/content/ayah/audio/hudhaify/075006.mp3
|
يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ |
7 |
ஆகவே, பார்வையும் மழுங்கி- |
/content/ayah/audio/hudhaify/075007.mp3
|
فَإِذَا بَرِقَ الْبَصَرُ |
8 |
சந்திரன் ஒளியும் மங்கி- |
/content/ayah/audio/hudhaify/075008.mp3
|
وَخَسَفَ الْقَمَرُ |
9 |
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும். |
/content/ayah/audio/hudhaify/075009.mp3
|
وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ |
10 |
அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான். |
/content/ayah/audio/hudhaify/075010.mp3
|
يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ |
11 |
"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்). |
/content/ayah/audio/hudhaify/075011.mp3
|
كَلَّا لَا وَزَرَ |
12 |
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. |
/content/ayah/audio/hudhaify/075012.mp3
|
إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ |
13 |
அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். |
/content/ayah/audio/hudhaify/075013.mp3
|
يُنَبَّأُ الْإِنسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ |
14 |
எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். |
/content/ayah/audio/hudhaify/075014.mp3
|
بَلِ الْإِنسَانُ عَلَى نَفْسِهِ بَصِيرَةٌ |
15 |
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்! |
/content/ayah/audio/hudhaify/075015.mp3
|
وَلَوْ أَلْقَى مَعَاذِيرَهُ |
16 |
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள். |
/content/ayah/audio/hudhaify/075016.mp3
|
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ |
17 |
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன. |
/content/ayah/audio/hudhaify/075017.mp3
|
إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ |
18 |
எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள். |
/content/ayah/audio/hudhaify/075018.mp3
|
فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ |
19 |
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது. |
/content/ayah/audio/hudhaify/075019.mp3
|
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ |
20 |
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள். |
/content/ayah/audio/hudhaify/075020.mp3
|
كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ |
21 |
ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள். |
/content/ayah/audio/hudhaify/075021.mp3
|
وَتَذَرُونَ الْآخِرَةَ |
22 |
அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/075022.mp3
|
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ |
23 |
தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/075023.mp3
|
إِلَى رَبِّهَا نَاظِرَةٌ |
24 |
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/075024.mp3
|
وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ |
25 |
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/075025.mp3
|
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ |
26 |
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், |
/content/ayah/audio/hudhaify/075026.mp3
|
كَلَّا إِذَا بَلَغَتْ التَّرَاقِيَ |
27 |
"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது. |
/content/ayah/audio/hudhaify/075027.mp3
|
وَقِيلَ مَنْ رَاقٍ |
28 |
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். |
/content/ayah/audio/hudhaify/075028.mp3
|
وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ |
29 |
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். |
/content/ayah/audio/hudhaify/075029.mp3
|
وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ |
30 |
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/075030.mp3
|
إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ |
31 |
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. |
/content/ayah/audio/hudhaify/075031.mp3
|
فَلَا صَدَّقَ وَلَا صَلَّى |
32 |
ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். |
/content/ayah/audio/hudhaify/075032.mp3
|
وَلَكِن كَذَّبَ وَتَوَلَّى |
33 |
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான். |
/content/ayah/audio/hudhaify/075033.mp3
|
ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِهِ يَتَمَطَّى |
34 |
கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! |
/content/ayah/audio/hudhaify/075034.mp3
|
أَوْلَى لَكَ فَأَوْلَى |
35 |
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். |
/content/ayah/audio/hudhaify/075035.mp3
|
ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى |
36 |
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? |
/content/ayah/audio/hudhaify/075036.mp3
|
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى |
37 |
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? |
/content/ayah/audio/hudhaify/075037.mp3
|
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَى |
38 |
பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/075038.mp3
|
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى |
39 |
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/075039.mp3
|
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى |
40 |
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? |
/content/ayah/audio/hudhaify/075040.mp3
|
أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى |