1 |
அளவற்ற அருளாளன், |
/content/ayah/audio/hudhaify/055001.mp3
|
الرَّحْمَنُ |
2 |
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். |
/content/ayah/audio/hudhaify/055002.mp3
|
عَلَّمَ الْقُرْآنَ |
3 |
அவனே மனிதனைப் படைத்தான். |
/content/ayah/audio/hudhaify/055003.mp3
|
خَلَقَ الْإِنسَانَ |
4 |
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். |
/content/ayah/audio/hudhaify/055004.mp3
|
عَلَّمَهُ الْبَيَانَ |
5 |
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. |
/content/ayah/audio/hudhaify/055005.mp3
|
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ |
6 |
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. |
/content/ayah/audio/hudhaify/055006.mp3
|
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ |
7 |
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். |
/content/ayah/audio/hudhaify/055007.mp3
|
وَالسَّمَاء رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ |
8 |
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. |
/content/ayah/audio/hudhaify/055008.mp3
|
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ |
9 |
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். |
/content/ayah/audio/hudhaify/055009.mp3
|
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ |
10 |
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். |
/content/ayah/audio/hudhaify/055010.mp3
|
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ |
11 |
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்- |
/content/ayah/audio/hudhaify/055011.mp3
|
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ |
12 |
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன. |
/content/ayah/audio/hudhaify/055012.mp3
|
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ |
13 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055013.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
14 |
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான். |
/content/ayah/audio/hudhaify/055014.mp3
|
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ |
15 |
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். |
/content/ayah/audio/hudhaify/055015.mp3
|
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ |
16 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055016.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
17 |
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. |
/content/ayah/audio/hudhaify/055017.mp3
|
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ |
18 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055018.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
19 |
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். |
/content/ayah/audio/hudhaify/055019.mp3
|
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ |
20 |
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா. |
/content/ayah/audio/hudhaify/055020.mp3
|
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ |
21 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055021.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
22 |
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன. |
/content/ayah/audio/hudhaify/055022.mp3
|
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ |
23 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055023.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
24 |
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன. |
/content/ayah/audio/hudhaify/055024.mp3
|
وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ |
25 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055025.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
26 |
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே - |
/content/ayah/audio/hudhaify/055026.mp3
|
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ |
27 |
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். |
/content/ayah/audio/hudhaify/055027.mp3
|
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ |
28 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055028.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
29 |
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான். |
/content/ayah/audio/hudhaify/055029.mp3
|
يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ |
30 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055030.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
31 |
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம். |
/content/ayah/audio/hudhaify/055031.mp3
|
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَا الثَّقَلَانِ |
32 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055032.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
33 |
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. |
/content/ayah/audio/hudhaify/055033.mp3
|
يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ |
34 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055034.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
35 |
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள். |
/content/ayah/audio/hudhaify/055035.mp3
|
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ |
36 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055036.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
37 |
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும். |
/content/ayah/audio/hudhaify/055037.mp3
|
فَإِذَا انشَقَّتِ السَّمَاء فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ |
38 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055038.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
39 |
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது. |
/content/ayah/audio/hudhaify/055039.mp3
|
فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ |
40 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055040.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
41 |
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள் |
/content/ayah/audio/hudhaify/055041.mp3
|
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ |
42 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055042.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
43 |
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்). |
/content/ayah/audio/hudhaify/055043.mp3
|
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ |
44 |
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/055044.mp3
|
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ |
45 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055045.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
46 |
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன. |
/content/ayah/audio/hudhaify/055046.mp3
|
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ |
47 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055047.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
48 |
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை. |
/content/ayah/audio/hudhaify/055048.mp3
|
ذَوَاتَا أَفْنَانٍ |
49 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055049.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
50 |
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/055050.mp3
|
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ |
51 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055051.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
52 |
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு. |
/content/ayah/audio/hudhaify/055052.mp3
|
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ |
53 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055053.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
54 |
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/055054.mp3
|
مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ |
55 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055055.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
56 |
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. |
/content/ayah/audio/hudhaify/055056.mp3
|
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ |
57 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055057.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
58 |
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/055058.mp3
|
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ |
59 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055059.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
60 |
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? |
/content/ayah/audio/hudhaify/055060.mp3
|
هَلْ جَزَاء الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ |
61 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055061.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
62 |
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன. |
/content/ayah/audio/hudhaify/055062.mp3
|
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ |
63 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055063.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
64 |
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை. |
/content/ayah/audio/hudhaify/055064.mp3
|
مُدْهَامَّتَانِ |
65 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055065.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
66 |
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/055066.mp3
|
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ |
67 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055067.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
68 |
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு. |
/content/ayah/audio/hudhaify/055068.mp3
|
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ |
69 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055069.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
70 |
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். |
/content/ayah/audio/hudhaify/055070.mp3
|
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ |
71 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055071.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
72 |
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். |
/content/ayah/audio/hudhaify/055072.mp3
|
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ |
73 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055073.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
74 |
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. |
/content/ayah/audio/hudhaify/055074.mp3
|
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ |
75 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055075.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
76 |
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். |
/content/ayah/audio/hudhaify/055076.mp3
|
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ |
77 |
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? |
/content/ayah/audio/hudhaify/055077.mp3
|
فَبِأَيِّ آلَاء رَبِّكُمَا تُكَذِّبَانِ |
78 |
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது. |
/content/ayah/audio/hudhaify/055078.mp3
|
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ |