| 1 |
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக. |
/content/ayah/audio/hudhaify/087001.mp3
|
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى |
| 2 |
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/087002.mp3
|
الَّذِي خَلَقَ فَسَوَّى |
| 3 |
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான். |
/content/ayah/audio/hudhaify/087003.mp3
|
وَالَّذِي قَدَّرَ فَهَدَى |
| 4 |
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான். |
/content/ayah/audio/hudhaify/087004.mp3
|
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى |
| 5 |
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான். |
/content/ayah/audio/hudhaify/087005.mp3
|
فَجَعَلَهُ غُثَاء أَحْوَى |
| 6 |
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்- |
/content/ayah/audio/hudhaify/087006.mp3
|
سَنُقْرِؤُكَ فَلَا تَنسَى |
| 7 |
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான். |
/content/ayah/audio/hudhaify/087007.mp3
|
إِلَّا مَا شَاء اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى |
| 8 |
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம். |
/content/ayah/audio/hudhaify/087008.mp3
|
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى |
| 9 |
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக. |
/content/ayah/audio/hudhaify/087009.mp3
|
فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَى |
| 10 |
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான். |
/content/ayah/audio/hudhaify/087010.mp3
|
سَيَذَّكَّرُ مَن يَخْشَى |
| 11 |
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான். |
/content/ayah/audio/hudhaify/087011.mp3
|
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى |
| 12 |
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான். |
/content/ayah/audio/hudhaify/087012.mp3
|
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى |
| 13 |
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான். |
/content/ayah/audio/hudhaify/087013.mp3
|
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَى |
| 14 |
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். |
/content/ayah/audio/hudhaify/087014.mp3
|
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّى |
| 15 |
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான். |
/content/ayah/audio/hudhaify/087015.mp3
|
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى |
| 16 |
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். |
/content/ayah/audio/hudhaify/087016.mp3
|
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا |
| 17 |
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும். |
/content/ayah/audio/hudhaify/087017.mp3
|
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى |
| 18 |
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்- |
/content/ayah/audio/hudhaify/087018.mp3
|
إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى |
| 19 |
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/087019.mp3
|
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى |