1 |
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? |
/content/ayah/audio/hudhaify/088001.mp3
|
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ |
2 |
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/088002.mp3
|
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ |
3 |
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். |
/content/ayah/audio/hudhaify/088003.mp3
|
عَامِلَةٌ نَّاصِبَةٌ |
4 |
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். |
/content/ayah/audio/hudhaify/088004.mp3
|
تَصْلَى نَارًا حَامِيَةً |
5 |
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். |
/content/ayah/audio/hudhaify/088005.mp3
|
تُسْقَى مِنْ عَيْنٍ آنِيَةٍ |
6 |
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. |
/content/ayah/audio/hudhaify/088006.mp3
|
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ |
7 |
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. |
/content/ayah/audio/hudhaify/088007.mp3
|
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ |
8 |
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/088008.mp3
|
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ |
9 |
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். |
/content/ayah/audio/hudhaify/088009.mp3
|
لِسَعْيِهَا رَاضِيَةٌ |
10 |
உன்னதமான சுவர்க்கச் சோலையில்- |
/content/ayah/audio/hudhaify/088010.mp3
|
فِي جَنَّةٍ عَالِيَةٍ |
11 |
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. |
/content/ayah/audio/hudhaify/088011.mp3
|
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً |
12 |
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. |
/content/ayah/audio/hudhaify/088012.mp3
|
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ |
13 |
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு. |
/content/ayah/audio/hudhaify/088013.mp3
|
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ |
14 |
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும். |
/content/ayah/audio/hudhaify/088014.mp3
|
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ |
15 |
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்- |
/content/ayah/audio/hudhaify/088015.mp3
|
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ |
16 |
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. |
/content/ayah/audio/hudhaify/088016.mp3
|
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ |
17 |
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- |
/content/ayah/audio/hudhaify/088017.mp3
|
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ |
18 |
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், |
/content/ayah/audio/hudhaify/088018.mp3
|
وَإِلَى السَّمَاء كَيْفَ رُفِعَتْ |
19 |
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், |
/content/ayah/audio/hudhaify/088019.mp3
|
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ |
20 |
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) |
/content/ayah/audio/hudhaify/088020.mp3
|
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ |
21 |
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். |
/content/ayah/audio/hudhaify/088021.mp3
|
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ |
22 |
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். |
/content/ayah/audio/hudhaify/088022.mp3
|
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ |
23 |
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- |
/content/ayah/audio/hudhaify/088023.mp3
|
إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ |
24 |
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான். |
/content/ayah/audio/hudhaify/088024.mp3
|
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ |
25 |
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/088025.mp3
|
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ |
26 |
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது. |
/content/ayah/audio/hudhaify/088026.mp3
|
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ |